2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'நோம்பின் இலக்கு ஒரு திட்டமிடல்' தலைப்பிலான மார்க்கச் சொற்பொழிவு

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) இலங்கைக் கிளையின் அனுசரணையுடன் சம்மாந்துறை செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோம்பின் இலக்கு ஒரு திட்டமிடல் எனும் தலைப்பிலான மார்க்கச் சொற்பொழிவு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை செந்நெல்; ஸாஹிறா மகா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

பாடாசாலை அதிபர் எம்.ஏ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) சம்மாந்துறைக் கிளையின் செயலாளர் மௌலவி கே.எம்.நியாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எச்.எம்.பாறுக், எம்.எச்.எம்.பாறுக், கணக்காளர் றபீக், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றசூல் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் மௌலவி சலாஹூதீன் மார்க்கச் சொற்பொழிவு நடத்தினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .