2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெற்று உணர்ச்சி கோஷங்களினால் மக்கள் மூளைச் சலவைக்குள்ளாக்க முடியாது: வேட்பாளர் ஆரிப் சம்சுதீன்

Super User   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்று உணர்ச்சி கோஷங்களினால் மூளைச் சலவைக்குள்ளாகாது  யதார்த்த அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அம்பாறை மவாட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்

கல்முனைகுடி கடற்கரை வீதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"ஒரு சில அரசியல்வாதிகள் வெற்றுக் கோஷங்களால் மக்களை மூளைச் சலவை செய்து, பிரதேசவாத நஞ்சை உட்செலுத்தி இப்பிரதேச மக்களை பிரதேசவாதம் என்ற பிணிக்குள் நிரந்தரமாக்கிவிட்டார்கள். மக்கள் பயன் பெறக்கூடிய பணிகள் எது நடைபெற்றாலும் அதனை யார் செய்தாலும்  அவற்றைப் பிரதேசவாத கண்ணாடிகொண்டுபார்க்க மக்களை பழக்கிவிட்டார்கள்.

இதனால் இப்பிரதேச மக்கள் யார் செய்கிறார்கள் என்று பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டார்களே தவிர அதனால் நாம் அடைய போகும் அனுகூலங்கள் எவை என சிந்திப்பதில்லை. இவ்வாறு மக்களை நல்ல மனப்பாங்குடன் சிந்திக்கச் செய்யாது மூளைச் சலவை செய்பவர்கள் அரசியல் யதார்த்தங்களை ஏற்க மறுக்கின்ற ஒர சிலரே என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னாள் அமைச்சர் மன்சூரினாலும் மறைந்த தலைவர் அஷ்ரபினாலும்; உருவாக்கப்பட்ட கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை கல்முனை மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அதேபோன்று அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அக்கரைப்பற்று வைத்தியசாலை அக்கரைப்பற்று மக்களுக்கு மாத்திரம் உரியதல்ல.

இப்பிராந்தியத்திலிருக்கும் எல்லா இன மக்களும் இந்த வைத்தியசாலைகளினால் நன்மையடைகிறார்கள். யார் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாம் எதை செய்கிறார்கள் என்று பாருங்கள். மக்களுக்கு அவர்கள் செய்பவற்றினால் நன்மையுண்டெனின் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவின்; அரசியல் சாணக்கியமும் ஆளுமையுள்ள தலைமைத்துவ பண்பும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.அதனால் தான் நான் தேசிய காங்கிரஸில் இணைந்தேன். அவர் கட்சியின் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்தும் கூட கடந்த மாகாண சபை தேர்தலிலும் நடைபெறவுள்ள தேர்தலிலும் எந்தவொரு வேட்பாளரையும் அக்கரைப்பற்று மண் சார்பாக நிறுத்தவில்லை.

இது அவருடைய அரசியல் வியூகம். எதிர்பார்ப்பும் இலக்கும் இலட்சியமும் பெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்படுமொரு தலைவராக அமைச்சர் அதாவுல்லா உள்ளார் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். யதார்த்த அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மக்கள் வேண்டி நிற்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைக்க என்னை ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • உண்மையின் உதயம் Friday, 03 August 2012 06:02 AM

    என்னப்பா சின்னப்புள்ள தனமாகவே சொல்லுரங்க அக்கரபத்துல வேட்பாளர போட்டா, அதவுள்ளட அரசியலுக்கு ஆப்பு வந்திடும் தெரியாதா????

    Reply : 0       0

    Rauf Maruthamunai Friday, 03 August 2012 09:08 AM

    சரியா சொன்னிங்க‌

    Reply : 0       0

    ramalan Friday, 03 August 2012 12:46 PM

    இன்னும் பத்து வருசம் போனாலும் முஸ்லிம் கான்கிரஸ் சாதிக்கப்போரது ஒன்டும் இல்லை. இந்த முறையாவது தெசிய கான்கிரசுக்கு ஆதரவ தெருவியுன்க நல்ல எதிர்ஹாலம் வெனுமென்டா.

    Reply : 0       0

    aslam Friday, 03 August 2012 01:35 PM

    அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்து இருப்பது அல்ல அரசியல் பரவலக்க‌ படனும்.

    Reply : 0       0

    rima Saturday, 04 August 2012 10:10 AM

    அக்கரைப்பற்றுல் வேட்பாளர போட்டா அரசியலுக்கு ஆப்பு வந்திடும் தெரியாதா?????????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .