2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை,  சாய்ந்தமருது பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட  25 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களை விற்பனைக்கு வைத்திருந்த  குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து கோல்சீல் சிகரெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது, அந்த வீட்டின் அறையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இந்த சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பரிதோதகர் வசந்த தலைமையிலான குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையை  மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X