2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மு.கா.வின் இரு வேட்பாளர்களின் ஆதரவுக் குழுக்களுக்கு இடையில் கைகலப்பு இடம்பெற்றதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை, சாய்ந்தமருதுப் பகுதியில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரு வேட்பாளர்களின் ஆதரவுக் குழுக்களுக்கு இடையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு கைகலப்பு  இடம்பெற்றமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான ஒரு வேட்பாளரின் ஆதரவாளர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனைப் பொலிஸார் கூறினர். 

இந்த கைகலப்புச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X