2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வீட்டிற்கு முன்னால் இனந்தெரியாத ஆயுதபாணிகள் துப்பாக்கியுடன் நடமாடினர்: மாகாணசபை உறுப்பினர் கலையரசன்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனின் வீட்டிற்கு முன்னால் இருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் நடமாடியதாக த.கலையரசன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினராக நாவிதன்வெளியைச் சேர்ந்த தவராஜா கலையரசன் தெரிவானார்.

நேற்றிரவு இரவு 7.30 மணியளவில் தான் வீட்டில் இருந்தபோது  வீட்டின் முன்னாலுள்ள வீதியில் இருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் நடமாடியதாகவும் அவர்களை பொதுமக்கள் நெருங்கியபோதே அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளதாகவும் கலையரசன் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பலமுறை கோரியும் இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் இதனால் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் பொலிஸாரே பொறுப்பு எனவும் த.கலையரசன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கில்  மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தனது உறுப்பினர்கள் பலருக்கு அச்சுறுத்தல்கள்  விடுக்கப்பட்டு வருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X