2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையிலும் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அதன் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறும் கோரினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X