2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மீளாய்வுக் கூட்டம்

Kogilavani   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் பணிமனை கூட்ட மண்டபத்தில் புதன்கிழமை(14) நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் ஏ.எல்.அலாவுதீன் மற்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் எம்.இஸ்ஸடீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் சேவையைப் பாராட்டி சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா மற்றும் உத்தியோகத்தர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை பணிமனையில் சேவையாற்றிவரும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையைப்பாராட்டி அதிதிகளினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X