2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மதுபோதையில் கலகம் விளைவித்தவரை சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவு

Gavitha   / 2015 ஜனவரி 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா


அம்பாறை, கோளவில் பிரதேசத்தில், மதுபோதையில் கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, 10 நாட்களுக்கு சமூகசேவையில் ஈடுபடுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் செவ்வாய்க்கிழமை (20)  உத்தரவுவிட்டுள்ளார்.


மதுபோதையில், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் கலகம் விளைவித்த நபரை, செவ்வாய்க்கிழமை (20) அக்கறைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.


கைது செய்த நபரை அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (20) ஆஜர்படுத்திய போதே, அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X