2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உழவு இயந்திர விபத்தில் இளைஞன் பலி

Administrator   / 2015 ஜனவரி 21 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, பொத்துவில் நாவலாறு பகுதியில் உழவு இயந்திரங்கள் இரண்டு குடைசாந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், பொத்துவில் அல்ஹுதா வீதியைச் சேர்ந்த 26 வயதான எஸ்.நுஸ்ரத் அலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பழுதடைந்த ஒரு உழவு இயந்திரத்தை பானமையிலிருந்து பொத்துவிலுக்கு பிறிதொரு உழவு இயந்திரத்திரத்தின் உதவியுடன் கட்டி இழுத்து வரும்போதே இரண்டு உழவு இயந்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பழுதடைந்த உழவு இயந்திரத்திலிருந்து சாரதிக்கு துணையாக வந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.


சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்துக்குறித்த விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X