2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நிபந்தனையை மீறி ஆற்று மண் அகழ்ந்தவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா


அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிபந்தனையை மீறி ஆற்று மண் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை(22) தீர்ப்பளித்தார்.


மேற்படி இருவரையும் அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று(21) கைதுசெய்தனர்.  


இவர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X