2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளை திறந்து வைப்பு

Thipaan   / 2015 மார்ச் 23 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹமத்துல்லா

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் புதிய கிளை, இன்று திங்கட்கிழமை(23) சுப வேளையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர் மற்றும் சபையின் பணிப்பாளர்கள் ஆகியோரின் அழைப்பின் பேரில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஷ்வின் த.சில்வாவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தம்பிலுவில் பிரதான வீதியில் (பழய மேகலா தியட்டர்) புதிதாக நிர்மாணித்துள்ள  கட்டடத்தில், தேசிய சேமிப்பு வங்கியின் 237ஆவது கிளையாக தம்பிலுவில் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 367ஆவது ஏ.ரீ.எம். இயந்திரமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வங்கி அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் புதிதாக இணைந்;து  கொண்ட வாடிக்கையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு தேசிய சேமிப்பு வங்கியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.  

 


  Comments - 0

  • KANDASAMY SIVANANTHOM Monday, 23 March 2015 07:46 PM

    mostly well come ,we are very happy your bank branch open our area well done

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X