2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சட்ட விரோதமாக ஆற்று மண் ஏற்றிய இருவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 மார்ச் 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அனுமதிப் பத்திரத்தை மீறி சட்ட விரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், திங்கட்கிழமை (23) தீர்ப்பளித்தார்.

இவர்களை, அம்பாறை பிராந்திய குற்றத் தடுப்பு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்தனர்.

குறித்த இருவரையும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (23) ஆஜர் செய்த போது நீதவான் மேற்படி தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X