2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கள்ளு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 மார்ச் 25 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

திருக்கோவில் பிரதேசத்தில் கள்ளு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான 14 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து அக்கரைப்பற்று பதில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான்; எஸ்.ஏ.ஆர்.அகீலா புதன்கிழமை உத்தரவிட்டார்.

கல்முனை மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த நபர்களை அக்கரைப்பற்று பதில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும், பதில் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.ஏ.ஆர்.அகீலா முன்னிலையில் புதன்கிழமை(25) ஆஜர்செய்த போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தடை செய்யபட்ட சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான நபர் ஒருவருக்கு 4 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X