2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அமர்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இம்மாத அமர்வு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (29) ஒலுவிலில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எல்.இஸ்மாயில் பூங்காவில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அமர்வில், கடந்த மாத கூட்டறிக்கையும் பொருளாளர் அறிக்கையும் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராயப்படவுள்ளதாக செயலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X