2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் காயம்

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மெதடிஸ் தேவாலயத்துக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை (26) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் காயமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் வீதியில் விழுந்திருந்த போது பொதுமக்கள், இளைஞனை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இளைஞன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X