Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிந்தவூர் பிரதேசத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, வீடு வீடாக சென்று டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களை இனங்கண்டு துப்புரவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்களும் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான பரிசோதணைகளை மேற்கொண்டனர்.
டெங்கு அபாயம் காணப்படும் இடங்கள் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, வீடு மற்றும் காணி உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025