2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நெல் அறுவடை விழா

Sudharshini   / 2015 மார்ச் 29 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பொத்துவில் றெத்தல் குளப்பள்ளியடி வட்டை பிரதேசத்தில், 150 ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்செய்கையின் அறுவடை விழா, சனிக்கிழமை (28) இடம்பெற்றது.

றெத்தல் பள்ளியடி வட்டை விவசாய அமைப்பின் ஆலோசகர் என்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நெல் அறுவடை விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகஸ்தர் குலநாயகம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொத்துவில் பிரதேச பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X