2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி காயம்

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியே காயமடைந்துள்ளதாக தெரிவித்த அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X