2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'நீர் எமது உயிர்' விழிப்புணர்வுக் கூட்டம்

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

'நீர் எமது உயிர்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டம் அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலய மண்டபத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று நீர்ப்பாசன திட்ட முகாமையாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று நீர்ப்பாசன வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நழீம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.நவாஸ், வளவாளராக கலந்து கொண்டு நீரின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பாயிஸ் உட்பட 50க்கு மேற்பட்ட விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X