Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 31 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஸிறாஜ் ஏ மனீஹா
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி, அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
அத்துடன், டெங்குநோய் பரவக்கூடிய அபாயம் காணப்படும் இடங்கள் சுகாதார பரிசேதகர்களால் பரிசோதனை செய்யப்பட்டன.
ஒலுவில், அஷ்ரப்நகர், அக்கரை, கட்டார் சுனாமி வீடமைப்புத்திட்டம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள பிரதேசங்கள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்களில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொண்டதோடு, டெங்குநோய் பரவாமல் தடுப்பது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பொது மக்கள், டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதால் இலகுவாக இவ் வேலைத் திட்டத்தினை முன்கொண்டு செல்லப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்கடர் ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025