2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஹிதாயபுரம் பொதுநூலகம் திறந்துவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ், சுமார் 15 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட ஹிதாயபுரம் பொதுநூலகம், மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (03) மாலை இடம்பெற்றது.

பொத்துவில் 20, தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட ஹிதாயபுரம் பொதுநூலகத்தை மக்கள் பார்வைக்கு கையளிக்கும் நிகழ்வில், திகாமடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஹிதாயபுரம் பொதுமக்கள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே தவிசாளர் வாசித் மேற்கொண்ட முயற்சியின்  பயனாகவே இந்த பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X