2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வதிவிட தலைமைத்துவப் பயிற்சி நெறி

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழக வீரர்களுக்கான ஒரு நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறி வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.

அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உளநல ஆலோசனை அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.ஆப்தீன் தலைமையில் நிந்தவூர் பிரின்ஸ் தோட்ட வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அன்பளிப்புச் செய்யப்பட்ட அல் அறபா விளையாட்டுக் கழகததுக்கான உத்தியோகபூர்வ மேலங்கியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், உளவளத் துணையாளர் டாக்டர்
ஏ. நஸ்லீன் ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X