2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாராட்டு நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அரசியல் வாழ்க்கையில் 37 வருடங்கள் நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமை புரிந்து பெரும் சேவையாற்றிய கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபெத்தியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (06) மாலை இடம்பெற்றது.

அம்பாறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சரும் நாடாளுமன்ற  உறுப்பினருமாகிய பீ.தயாரட்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன், அலிசாஹிர் மௌலானா, வீமலவீர திஸாநாயக்கா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X