2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அபிவிருத்திக்கான திட்ட வரைவு தயாரிப்பு தொடர்பில் கள விஜயம்

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அரசாங்கத்தின் 100 நாட்கள் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக பாலமுனை பிரதேச அபிவிருத்திக்கான திட்ட வரைவு தயாரிப்பு தொடர்பான கள விஜயம் வெள்ளிக்கிழமை(10) இடம்பெற்றது. 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.அன்ஸிலின் தலைமையில் இடம்பெற்ற கள விஜயத்தில் பாலமுனை, பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பொது விளையாட்டு மைதானம், கடற்கரை பூங்கா, வாவிக்கரையோரம், சிறுவர்  பூங்கா அமைத்தல் போன்ற இடங்களை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர்  யூ.எல்.எம்.எல்.முபீன், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் யு.எம்.வாஹித், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப்  பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும்  வடிகாலைமைப்புச்சபை யின்  உயர் அதிகாரிகள், முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X