2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பெண்கள் சாரணர் குழு அங்குரார்ப்பண நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று வலயக்கல்விப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண்கள் சாரணர் குழு அங்குரார்ப்பண வைபவம், ஞாயிற்றுக்கிழமை (12) பாடசாலை திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.

இதன்போது சாரண மாணவர்கiளிடையே நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விக்கல்லூரி விரிவுரையாளரும் அக்கரைப்பற்று கல்முனை கல்வி மாவட்ட கௌரவ சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பிரதி அதிபர் எம்.எம்.இபதுல்லா, பாடசாலை சாரண ஆசிரியர்களான எம்.எஸ்.எம்.அன்வர், யு.எல்.அஸ்வத் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X