2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஓய்வுபெற்ற கிராம சேவகர் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா

Sudharshini   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

ஓய்வுபெற்ற கிராம சேவகர் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (19) அக்கரைப்பற்று வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற கிராம சேவகர் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு மலரின் முதற் பிரதியை பிரதம அதிதியிடமிருந்து  சங்கத்தின் ஆலோசகர் எம்.கந்தப்பன் பெற்றுக்கொண்டார்.

ஓய்வுபெற்ற கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கரையோர கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.அஜ்வத் பிரதம அதிதியாகவும், ஓய்வுபெற்ற கிராம கிராம சேவகர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.கந்தப்பன், கரையோர கிராம கிராம சேவகர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.ஏ.நஜீப், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த  ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .