2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணுக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த பெண்ணுக்கு, அக்கரைப்பற்று மாவட்;ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

மேற்படி சந்தேக நபரான பெண்ணை, திருக்கோவில் பொலிஸார் நேற்று (20) திங்கட்கிழமை கைதுசெய்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று (21) நீதவான்  முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.

குறித்த பெண் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .