2025 ஜூலை 14, திங்கட்கிழமை

70 இலட்சம் ரூபாய் பெறுமதியான பள்ளிவாயல் திறந்துவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் - பசறிச்சேனையில் சுமார் 70 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜூம்ஆப் பள்ளிவாயல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சூதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜூதின் மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பசறிச்சேனை மக்களின் மிக நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், பசறிச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .