Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் 2014ஆம் ஆண்டு சித்தியடைந்த கா.பொ சாதாரண தர மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாட்டின் கீழ் 'வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு' எனும் தொனிப்பொருளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (30) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
அல் அர்ஹம் வித்தியாலய ஆசிரியர் யூ.எல்.எம்.இப்றாகிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், விஷேட அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டு, பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதன்போது பாடசாலை மாணவர்களால் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago