2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'வறுமையை தாண்டி கல்விக்காக பாடுபடுங்கள்'

Suganthini Ratnam   / 2015 மே 31 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

வறுமையை காரணம் காட்டி ஒரு சில பெற்றோர்  பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி தங்களது தொழிலுக்கு உதவியாக வைத்துள்ளனர். அது பெரும்பாலும் பின்தங்கப்பட்ட பிரதேசங்களிலேயே இடம்பெறுகின்றன. இந்த நிலையில், பெற்றோர் வறுமையை தாண்டியும் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பாடுபடுங்கள் என திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளன் தெரிவித்தார்.

சர்வதேச இஸ்லாமிக் ரீலீப்,  மொறிசியஸ் நாட்டின் உதவியுடன் செயற்படுத்தும் வெள்ள நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில்  உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கல்வி வாழ்க்கையின் முழுமையான சொத்து. கற்றவனாக இரு அல்லது கற்பிப்பவனாக இரு அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு. கல்விக்கு தடையான நான்காவது நபராக இருந்துவிடாதே' எனவும் அவர் கூறினார்.

இன, மத, மொழி வேறுபாடின்றி நல்ல சிந்தனை கொண்ட அமைப்பாக இஸ்லாமிக் ரீலீப் செயற்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

நீர் பெறுவதற்கான உதவிகள், பண உதவிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரண உதவிகள் என பல்வேறு துறைசார்ந்த உதவிகளை வறிய மக்களுக்காக இவர்கள் வழங்கி வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நீங்கி அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்; வறுமையானது கல்விக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்ட இவர்கள் போன்ற பல்வேறு அமைப்புக்கள் உதவிகளை புரிந்து வருகின்றமை மகிழ்ச்சி தருகின்றது' எனவும் அவர் கூறினார்.

இஸ்லாமிக் ரீலிப் நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இப்றாகிம் சப்ரி தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mcm.thasleem Wednesday, 03 June 2015 06:50 AM

    good speach

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .