2025 ஜூலை 02, புதன்கிழமை

மத்தியகுழுவுக்கான புதிய நிர்வாகத் தெரிவு

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவுக்கான புதிய நிர்வாகத் தெரிவு, 5ஆம் கொளனி மிஃராஜ் பல்தேவைக் கட்டட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்ததுணைத் தலைவருமான அப்துல் மஜீட் தலைமையில் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இதன்போது மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழு அமைப்பாளராக எம்.ரீ.லத்தீப், தலைவராக ஏ.சீ.ஏ.நஸார் ஹாஜி, செயலாளராக எம்.வீ.நவாஸ், பொருளாராக முகம்மது அலி, துணைத் தலைவர்களாக ஏ.எல்.ஜலீல், ஏ.எம்.மஹ்ரூப், உப செயலாளராக ஜெ.எம்.சமீம் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தாஜாப்தீன், அஸ்-சிறாஜ் மகா வித்தியாலய அதிபர் வை.யூசுப், முன்னாள் சவளக்கடை மத்திய குழு அமைப்பாளர் ஏ.அஸீஸ், கட்சியின் கிளைக்குழுக்களின் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் கடந்த காலங்களில் மத்தியமுகாம், சவளக்கடை பிரதேசங்களுக்கென தனித்தனியாக மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகம் இயங்கிவந்தன.

கட்சியின் கிளைக்குழுக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இது மாற்றியமைக்கப்பட்டு இம் முறை மத்தியமுகாம், சவளக்கடை இணைக்கப்பட்டு நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .