2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

திருக்கோவில் பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கில் செலுத்திய குற்றச்சாட்டில் கைதானவருக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் 15 நாட்கள் கடூழிய சிறை தண்டனையும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.  

குறித்த நபர் திருக்கோவில் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(2) கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்செய்த போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கும் ரூபா 16 ஆயிரம் அபராதமும் 15 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுத்துமாரும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .