2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நெற்களஞ்சியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

விவசாய அமைச்சின் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் விவசாய மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே,  பிராந்திய விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. லத்தீப், பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி  அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஏச்.எம்.நபார், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும், ஓய்வு பெற்ற வைத்தியர் எம்.வை. முஸ்தபா, கிராம சேவை அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X