2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஜூன் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

கல்வி அமைச்சின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எச்.எம்.பாறூக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதியமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண உறுப்பினர் தயா கமகே,  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஜீம், வலயக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X