Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்டம் பல வழிகளிலும் பின்னிலையிலுள்ளது. முஸ்லிம் மக்களின் பெரும்பான்மைத்துவம், பெரும்பான்மையினத்தவரின் குடியேற்றத்தினால் ஏற்பட்ட பெரும்பான்மைத்துவம் போன்றவற்றினால் 21 சதவீதமாகவிருந்த தமிழ் மக்கள் இன்று 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி மயில்வாகனம் தேவாராஜாவின் 31 வருடகால சேவை நலன் பாராட்டு விழா, அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்ற சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழர்களின் விகிதாசாரம் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களாகிய நாம் எந்த நிலத்தில் வாழ்கின்றோமோ, அதை தமிழ் நிலமாக குறிப்பிடுவதே வரலாறாகும். அந்த நிலத்தை தமிழினமில்லாமல் மாற்றிவிட்டால், எங்களது ஆட்சி தமிழினத்தில் இடம்பெற முடியாது செய்து எங்களது அரசியில் அதிகாரத்தையும் நாங்கள் தீர்மானிப்பதிலிருந்து எங்களை வீழ்த்திவிட நினைக்கின்றார்கள்.
தமிழர்களின் நிலத்தை விடுவிக்க சிலர் விரும்பவில்லை. ஆனால், தமிழ் மக்களின் ஒரு அங்குல நிலத்தையேனும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை. அதற்காகப் போராடுவோம்' என்றார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சி.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago