Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த த.லுக்சாந்த் (வயது –16) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கல்முனை பொலிஸாருக்கும்; கடற்படையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில், ஒலுவில் கடற்படை முகாம் சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் கல்முனை இராமகிருஸ்னமிசன் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .