2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் தீ விபத்து

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால்   40ற்கும் மேற்பட்ட கணினிகள் தீக்கிரையாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும், மின்னொழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X