2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (12) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அறுகம்பை ஆட்டோ சங்க உரிமையாளர் சங்கம், உல்லை பிரதேச விளையாட்டுக் கழகங்கள் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆhப்பாட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜும்மாத் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற இக்கண்டன போராட்டத்தைத் தொடர்ந்து, பொத்துவில் பிரதேச செயலாளர் என்எம்.எம். முஸாரத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பிலான மகஜரை மியன்மார் தூதுவருக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X