2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் வாழ்வாதரத்தை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிசாட் பதியுதீனின்  ஏற்பாட்டில்; தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழா நேற்று (13) சனிக்கிழமை  சம்மாந்துறை உடங்கா -02ஆம் கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.சீ.எம்.சஹீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சீ.எம்.முபீத், மாகாண இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா மற்றும் பலரும்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X