Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான் ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஐ.ஏ.ஸிறாஜ்
சாய்ந்தமருது நகரசபை கோரிக்கையை வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழு நாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம், நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான அழைப்பை விடுத்து, இந்த அமைப்பினால் – பிரதேசம் எங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாளையதினம் (15) வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தையும் திறக்காதிருப்பதுடன், பொதுமக்கள் அனைவரும் அன்றையதினம் காலை 7.30 மணிக்கு சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு அணி திரண்டு வருமாறும் மேற்படி அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பள்ளிவாசலில் – சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பிரகடனம் செய்யப்பட்டு, விசேட தொழுகையும் தூஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கருஜயசூரிய உறுதியளித்து பல மாதங்களாகியும் அது இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் தடையாக இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago