Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
உயர்கல்வியைப் பெறும் மாணவர்கள் சிறந்த ஆராய்ச்சிகளிலும் அறிவான தேடல்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் நவீன உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய சமூகமொன்றினை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்குமென உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பி. ரணேபுர, சனிக்கிழமை (13) தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடம் மற்றும் விடுதிகள் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'இன்று கல்விக்காக அரசாங்கம் பல்வேறுபட்ட உதவிகளையும் சலுககைளையும் வழங்கி வருகின்றது. அந்தவகையில் உயர்கல்விக்கான அபிவிருத்தியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறுகியதொரு காலப்பகுதியில் அபார அபிவிருத்திகளைப் பெற்றுள்ளது' என அவர் தெரிவித்தார்.
'இங்கு பௌதீக, ஆளணி மற்றும் ஏனைய அபிவிருத்திகள் என்பன மிகவும் சிறந்த முறையில் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மாணவர்களிடமிருந்து இந்த நாடு சிறந்த வெளியீடுகளை எதிர்பார்த்து நிற்கின்றது என்பதனையும் கல்விச்சமூகம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது' என அவர் தெரிவித்தார்.
'உயர்கல்வியைப் பெற்றுவரும் மாணவர்கள் ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்றுவிடக் கூடாது. உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை பார்க்க வேண்டும். அவ்வாறு தாங்களும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago