Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூன் 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி. அன்சார்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யவது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன் உயர் மட்டக் கலந்துரையாடலொன்று புதன்கிழமை(18) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஏ.இஸ்ஸதீன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 93 வருடங்கள் பழமைவாய்ந்தாகும். இது 1982ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகவும் 2007ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட 150000 மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து வரும் பிரதான வைத்தியசாலையாக காணப்படுகிறது. தற்போது இவ் வைத்தியசாலையில் தினமும் வெளிநோயாளர் பிரிவில் 700- 800 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பிரதேச மக்கள் அவசர சிகிச்சைக்காக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் போன்ற தூர இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளதால் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். மாகாண சபை நிர்வாகத்தில் இயங்கிவரும் இவ்வைத்தியசாலை வளப்பற்றாக்குறையுடனும், ஆளணி போதாமையினால் பொதுமக்களுக்கு சீராக சிகிச்சை அளிக்க முடியாத இக்கட்டான நிலையில் இயங்கி வருகின்றமையினால் இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற அவசியத்தை வைத்திய அதிகாரிகள் குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் விரிவாக விளக்கிக்கூறினர்.
அதிகாரப்பரவலாக்கத்திற்கு நான் என்றும் ஆதரவளிப்பவன். மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் வைத்தியசாலையை என்னால் உடனடியாக கொண்டுவர முடியாது. வைத்தியசாலையின் ஆளணி, வளப்பற்றாக்குறைகள் மற்றும் உடனடித்தேவைகளையும் தீர்த்துத்தர எப்பொதும் தயாரகவுள்ளேன்.
அதற்கான உத்தேச அறிக்கைகளை சமர்ப்பித்தால் அதற்கான நிதியினை சுகாதார அமைச்சின் ஊடாக ஒதுக்கீடு செய்வதற்கு தயாராகவுள்ளேன். என அமைச்சர் ராஜித சேனரத்ன குழுவினரிடம் தெரித்தார்
உத்தேச அறிக்கைகளை சமர்ப்பித்தால் அதற்கான நிதியினை எனது அமைச்சின் மூலம் உடடியாக ஒதுக்கீடு செய்ய நடடிக்கையினை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago