2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தனி உள்ளூராட்சி சபையை ஏற்படுத்த பரிந்துரை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ஐ.ஏ.ஸிறாஜ்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துமாறு கிழக்கு மாகாணசபை பரிந்துரை செய்துள்ளது. இதற்கமைய இந்த ஆவண பிரதி சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிடம் இன்று (18) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபாவிடம் இந்த ஆவணத்தை கையளித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கடந்த மாகாண சபை அமர்வின்போது, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த தனி நபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதன் பிரகாரமே இப்பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .