2025 ஜூன் 28, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று புதன்கிழமை (17) தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதித்தார்.

மக்காமடி மற்றும் அலிகம்பை பிரதேசங்களில் அக்கரைப்பற்று பொலிஸாரும் அம்பாறை பிரதேச மின்சார சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள்  கைதுசெய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .