2025 ஜூன் 28, சனிக்கிழமை

புதிய பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரீ.பி.சம்சூதீன் வெள்ளிக்கிழமை (19)  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த இரண்டு மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட என். வாகிஸ்ட அண்மையில் ஓய்வுபெற்ற நிலையில், அந்த வெற்றிடத்துக்கு இவர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபருக்கான பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்கர் அனுருத்த பண்டார ஹக்மன உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிராந்தியங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .