Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 21 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் இன்று பௌத்த, தமிழ், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்கின்றனர். இதற்கு மதகுருமார்களின் சிறந்த வழிகாட்டுதல்கள் பிரதான காரணியாக இருக்கின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள தொல்பொருல் ஆராச்சி நிலையத்தின் முகுது மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமான பௌத்த விகாரையை சனிக்கிழமை (20) திறந்து வைத்து உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
'30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தை வெற்றிகொண்டு விட்டோம் என்ற சந்தோசத்தில் நாம் இருக்கின்றோம். இருந்த போதும் யுத்தம் எதனால், எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது? என்பதை நாம் ஒவ்வொருவரும் படிப்பினையாக கொள்ளவேண்டும்' என அவர் தெரிவித்தார்.
'நான் சுகாதார அமைச்சராக இருக்கும் போது, இங்கு இருக்கும் சிரேஷ்ட வைத்தியர் கபில தலைமையிலான குழுவினர் வைத்தியர்களாக மாத்திரம் நாட்டிற்கு சேவையாற்றவில்லை. பின்தங்கிய கிராமங்களில் பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டார்கள். அவரின் அயராத உழைபபுக்கு கிடைத்த வெற்றியே இந்த 60 அடி விகாரையாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
5 hours ago