2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெளிப்படையில்லாத ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண சபையின் கூட்டாட்சி என்ற பெயரில் நடைபெற்றுவரும் சில தவறான செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணத்தில் வளர்க்கப்பட்ட இன ஒற்றுமை சிதைந்து, சமூகங்கள் மத்தியில் சந்தேக நிலைமையை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை தோற்றிவித்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சிக்கான நிதிக் கொள்கை அமுல்படுத்தப்படல் வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினத்தினால் கடந்த கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கூட்டாட்சி அமைத்து 03 மாதங்கள் கடந்த நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கூட்டாட்சி தொடர்பாகவும் சந்தேகம் தெரிவித்து நல்லாட்சிக்கான கொள்கையை சரியாக வழி நடத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்கும் நிலை இன்று உருவாகியிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும்.
 
முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சியில் இனங்களுக்கிடையில் அறுந்து போய் இருந்த இன ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன், கிழக்கில் வரலாற்று அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டிருந்தோம்.
 
கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக மூவின மக்களின் இன ஒற்றுமைக்கு வித்திட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதனால் மாகாண சபையின் செயற்பாடுகளில் மூவின மக்களும் நம்பிக்கை வைக்கும் நிலை உருவாகியது.
 
இன்றய கிழக்கு மாகாண சபை ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் காண முடியாது. வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க முடியாது.
 
இதுவரை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள், அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் வெளியே வரவில்லை. வரவு- செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆளுங்கட்சியினர்களுக்கே விவரங்கள் தெரியாது என்ற நிலமை இன்று உருவாகியுள்ளமை ஜனநாயகத்துக்கும் வாக்களித்த மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .