2025 ஜூன் 28, சனிக்கிழமை

வாய்க்காலில் டிப்பர் வீழ்ந்து விபத்து

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் ஆலயடிக்கு அருகே நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக டிப்பர் வீதியின் அருகிலுள்ள வாய்க்காலில் வீழ்ந்து முழ்கியுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

தெய்வாதீனமாக சாரதி மற்றும் டிப்பரில் பயணித்த இன்னொருவரும் உயிர் பிழைத்துள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே டிப்பர் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு அருகில் ஆசனப்பட்டியணிந்திருந்ததால் தப்பிக்க முடியாது அவஸ்தைப்பட்டதாகவும் அதனையடுத்து பொதுமக்களின் முயற்சியினால் அவர் மீட்கப்பட்டு மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் மருதமுனையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .