2025 ஜூன் 28, சனிக்கிழமை

குருதி நன்கொடையாளர்கள் கௌரவிப்பும் விழப்புணர்வு கருத்தரங்கும்

Thipaan   / 2015 ஜூன் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உலக குருதி நன்கொடையாளர் தினத்தையொட்டி, அம்பாறை போதனா வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குருதி நன்கொடையாளர்கள் கௌரவிப்பும், விழப்புணர்வு கருத்தரங்கும் வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

வைத்தியசாலைப் பணிப்பாளர் லங்கா திலக ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதார, சுதேச இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது மற்றவர்களின் உயிருக்காகவும், சமூக நலனுக்காகவும் பல முறையாக நன்னொடையாக குருதி வழங்கியவர்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், இரத்த வங்கி பொறுப்பதிகாரிகள், மற்றும் சுகாதாரதுறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .