2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

யுத்தப் பாதிப்புக்குள்ளானோருக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

யுத்தம் காரணமாக உயிர் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்காக ஆவணங்களை ஒழுங்குபடுத்தி கோவைகளை பூரணப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அதிகாரசபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 25ஆம் 26ஆம் திகதிகளில் நடமாடும்சேவை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான கடிதம்  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் அனுப்பப்பட்டுள்ளது.  
பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான  நடமாடும்சேவை  திருக்கோவில் பிரதேச காலாசார மத்திய நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (25) காலை 08 மணியிலிருந்து  மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.

கல்முனை தமிழ்ப்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நாவிதன்வெளி,  அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நடமாடும்சேவை கல்முனை தமிழ்ப்; பிரதேச செயலகத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.

இதன்போது,  சுமார் 800 பயனாளிகளுக்கு சேவைகளை  பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி.வனிகசூரிய தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X